முன்னாள் பாஜக எம்.பி. கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி.!

Default Image

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் சுக்லா கொரோனாவால் உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் முன்பைவிட அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,636,307ஆக அதிகரித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் சுக்லா கடந்த சில நாள்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ராய்பூரில் உள்ள ராமாகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்