#BREAKING: சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் போதே, மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, இன்று அந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மே 1ம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்கெட்டுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் தடையை மீறி இறைச்சி விற்பனை கடைகளை திறந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தமிழக அரசு எச்சரித்துள்ளது

மேலும் ஏற்கனவே அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தால், சனிக்கிழமை அன்று இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகம் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்