மத்திய அரசுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு வலியுறுத்தல்!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Default Image

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக,  தெரிவித்திருக்கிறார் டெல்லியில், 15ஆவது நிதி ஆணைய தலைவர் கே.என்.சிங்கை, எம்.பிக்களோடு சென்று சந்தித்தப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் இயற்கை பேரிடர்களால் தமிழ்நாடு அடிக்கடி பாதிக்கப்படுவதையும், அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும்  வலியுறுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்திய அரசு நிதி வழங்க அறிவுறுத்தியிருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு கூடுமானவரை அதிகளவு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்