அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, புதுவை மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், நாளை மறுநாளுக்குள் விடுதியை காலி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025