#Latest:முதலமைச்சர் வீட்டின் முன் போராட்டம்;ஒடிசாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Default Image

ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு  2020-21 கல்வியாண்டிற்கான  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது.

ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய  மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முன் பிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதரஸா கல்வி வாரிய தேர்வுகளும் ரத்து என்று கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் புதன்கிழமை அறிவித்தார்.

மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தேர்வு குழுவின் விதிகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.கொரோன நிலைமை மேம்படும் போது மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வு எழுதலாம் , “என்று டாஷ் மேலும் கூறினார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,851 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டது  மேலும் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்