ஏப்ரல் 23 முதல் 26 வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்!!

புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வாரங்களில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுகிறது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் புதுச்சேரியில் தினதோறும் பாதிப்பு மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025