வாக்கு எண்ணிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

Default Image

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே2-ஆம்   தேதி நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உடன்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாகு விளக்கம் அளித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்