நாடு முழுவதும் UPSC தேர்வு ஒத்திவைப்பு..!

Default Image

சிவில் சர்வீசஸ் தேர்வு -2020 க்கான நேர்காணல் தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் யு.பி.எஸ்.சி ஒத்திவைத்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ்,  ஐ.எஃப்.எஸ் , ஐ.பி.எஸ் மற்றும் பிற பதவிகளுக்கு இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது.  தேர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும், இரண்டு கட்ட தேர்விலும்  வெற்றி பெற்றவர்கள் இறுதியாக நேர்காணல் செய்யப்படுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை வேகமாக பரவிவருவதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்