அரைசதத்தை தவறவிட்ட தமிழக வீரர் ஷாருக்கான்..!

Default Image

47 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த தமிழக வீரர் ஷாருக்கான்.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் பரிதாபமான நிலையில் இருந்த போது மத்தியில் இறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்ப்பட்ட நிலையில், 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 47 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நடப்பு தொடரில் இருந்து தான் ஷாருக்கான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். 107 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்