பந்து வீச்சில் மாஸ் காட்டிய சென்னை.., 106 ரன்கள் எடுத்த பஞ்சாப்..!

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால், பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் என 5 வீரர்களும் அடுத்தது விக்கெட்டை இழந்தனர்.

இதன்காரணமாக பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் பரிதாபமான நிலையில் இருந்த போது மத்தியில் இறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்னில் ஷாருக்கான் விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 4 விக்கெட் பறித்தார்.

author avatar
murugan