நடிகர் விவேக் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.., முதல்வர் ..!

Default Image

நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் உள்ள நடிகர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டரில் நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்