பெண்ணின் பாவாடை, சேலை, ஜாக்கேட்டை காட்டி போலீசார் விசாரணை…! பின்னணி என்ன…?

Default Image

பெண்ணின் பாவாடை, சேலை, ஜாக்கேட்டை காட்டி போலீசார் விசாரணை. 

சேலத்தில், டால்மியாபுரம் என்ற பகுதியில், வெள்ளைக்கல் எனப்படும் கனிமம் வெட்டி எடுக்கும் பகுதி உள்ளது. இந்த பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சூரமங்கலம் உதவி ஆணையர் நாகரராஜன் தலைமையில் சென்ற போலீசார், எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரித்ததில், அது ஒரு பெண்ணின் எலும்பு கூடு என்பது தெரியவந்துள்ளது. இந்த எலும்புக்கூட்டின் அருகே சேலை, உள்பாவாடை, மற்றும் ஜாக்கெட் கிடந்துள்ளது. இதனை எடுத்து வந்து, அதை அப்பகுதி மக்களிடம் காண்பித்து இதுகுறித்து விசாரணை செய்தனர். ஆனால், யாருக்கும் அடையாளம்  தெரியாததால், இதுகுறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்