24 மணி நேரம் பிரச்சாரத்திற்கு தடை…! தேர்தல் ஆணையத்தை கண்டித்து மம்தா தர்ணா போராட்டம்…

Default Image

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விதிகளுக்கு மாறாக வதூறு பரப்பும் வகையில் பேசியதாக, இன்று மதியம் 12 தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள  நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை வைத்திருப்பது அரசியல்  சட்டவிதிகளுக்கு மாறானது என ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்