திட்டமிட்டப்படி பிளஸ் 2 தேர்வு மே 3-ஆம் தேதி முதல் நடத்த முடிவு…!

Default Image

பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் மே 3-ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருந்தது.

இந்த தேர்வுகள் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்