பிறந்து இரண்டு வாரங்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…!

Default Image

குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மக்களின் அலட்சியப்போக்கு காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில், கடும் வயிற்று போக்குடன் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரை கவனித்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்