டீ மாஸ்டராக மாறி பஜ்ஜி, வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த ஹரி நாடார்…!

Default Image

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அணைத்து வேட்பாளர்களும் வித்தியாசமான முறையில், மக்களை கவரும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார், தலைக்கவசம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஆலங்குளம் பேருந்து  நிலையம் அருகே ஹரி நாடார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திடீரென டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்