20 நாட்களுக்கு பின் மழைநீர் வடிகுழாயில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண்…!

Default Image

அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகுழாய் 20 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்.

அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக மழைநீர் வடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகுழாயில் இருந்து சத்தம் போடுவது போன்று அந்த வழியாக சென்ற ஒருவருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் அதிகாரிகள் அவரை நிர்வாணமான நிலையில், மீட்டெடுத்துள்ளனர்.

பின் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து 43 வயதான அப்பெண் கூறுகையில், மார்ச் 3-ம் தேதி அவர் கால்வாய்க்கு நீந்துவதற்காக சென்றுள்ளார்.  சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எப்படி திரும்புவது என்று வழி தெரியாத நிலையில், இறுதியாக மழை நீர் குழாய்களில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு அங்கு சென்று யாரவது சாலையில் செல்வோரை கூப்பிடலாம் என அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்