#Breaking : ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான சோதனை வாக்கெடுப்பு….! இந்திய புறக்கணிப்பு…!

Default Image

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சோதனை வாக்கெடுப்பு தொடங்கிய நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை எனக்  கூறப்படுகிறது.

இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. மனித உரிமை மன்றத்தில், 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தீர்மானத்தில், 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் வெற்றிபெறும்.

சீனா,  ரஷ்யா,பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகளின் தரவுடன் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்டும் என இலங்கை தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியா மற்றும் சீன பிரதமர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஆதரவு கோரியிருந்தார். இதற்கிடடையில், இலங்கை வெளியுறவு துறை செயலாளர், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா? அல்லது எதிராக வாக்களிக்குமா? என்ற கேள்வி  எழுந்து வந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சோதனை வாக்கெடுப்பு தொடங்கிய நிலையில், இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை எனக்  கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்