தேர்தலுக்கு பின் திமுக காணாமல் போய்விடும்..! – முதல்வர் பழனிசாமி

Default Image

இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில், பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்.

 ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கூட்டணி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசாங்கத்தை பற்றி அவதூறு பேசி வரும் ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தல் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்