#INDvENG: இந்திய அணி தொடரை கைப்பற்றியது.., 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Default Image

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்றது. இன்று கடைசி டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், விராட் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடி வர, ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். பின்னர், 64 ரன்கள் எடுத்து ரோஹித் வெளியேற, இதைத்தொடர்ந்து, இறங்கிய சூரியகுமார் யாதவ் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து  பெவிலியன் திரும்பினார்.

அடுத்து இறங்கிய  ஹர்திக் பாண்டியா ,கோலி இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 224 ரன்கள் குவித்தனர். கடைசிவரை களத்தில் விராட் கோலி 80* , ஹர்திக் பாண்டியா 39* ரன்களுடன் நின்றனர்.

225 ரன்கள் இலடக்குடன் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய்,
ஜோஸ் பட்லர் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஜேசன் ராய் வெளியேற பின்னர், டேவிட் மாலன் களமிறங்கினர். ஜோஸ் பட்லர், டேவிட் மாலன் இருவரும் கூட்டணி வைத்து அணியின் எண்ணிகையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.

இதையெடுத்து ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்த சில நிமிடங்களில் விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 130 ரன்கள் எடுத்தனர். அடுத்த 10 ரன்னில் டேவிட் மாலன் 68 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார். அடுத்து இறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 7 , மோர்கன் 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்