கர்ணன் படத்திற்கு தடை கோரி வழக்கு…. இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்..!!

கர்ணன் படத்திற்கு தடை கோரி வழக்கு புல்லட் பிரபு என்பவர் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு செய்துள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில்,  நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் பண்டாரத்தி புராணம் ஆண்டி பண்டாரம் என்ற சமூகத்தை காயப்படுத்தும் விதமாக உள்ளதாகவும், படம் வெளியாவதற்கு முன்பு அந்த பாடலை படத்திலிருந்து நீக்கவேண்டும் என்றும் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.