மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு ….!

Default Image

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி அவர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் அகமதாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 1999 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 2003-2004-ஆம் ஆண்டு கப்பல்துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்