தேமுதிக ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் மாற்றம் -விஜயகாந்த் அறிவிப்பு..!

Default Image

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பா மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிவக்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திரு பா மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சாந்த நிர்வாகிகளும் தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி கழக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்