#INDvENG: இரண்டாம் டி-20 போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்தை பழிவாங்குமா இந்திய அணி?

Default Image

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாம் டி-20 தொடர், இன்று அமஹாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாம் போட்டி இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதே வேகத்தில் டி-20 தொடரை கைப்பற்றி, இந்தியாவை பழிவாங்கும் நோக்குடன் உள்ளது.

இந்திய அணியை பொறுத்தளவில், முதல் போட்டியில் செய்த தவறுகளை இதில் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பந்தை கணிக்காமல் அடிப்பது, உள்ளிட்டவை. அதேபோல இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நோக்குடன் தீவிர பயிற்சி பெற்று வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்