பாபநாசம் அரசு பள்ளியில் நேற்று 20 மாணவிகள், இன்று 36 மாணவிகளுக்கு கொரோனா..!

Default Image

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவிக்கும், சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, 2 வாரம் விடுமுறை கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் 36 பேருக்கு உறுதியானது. மேலும் ஒரு ஆசிரியருக்கும்   தொற்று உறுதியாகியுள்ளது.

மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்