ஒரே தொகுதியை கேட்பதால் தாமதம்.. நாளை இறுதியாகும்..திருமாவளவன் .!

Default Image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சார்ந்த 174 பேர், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

4 தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 தொகுதிகள் முடிவாகவில்லை. ஒரே தொகுதியை பிற கட்சிகளும் கேட்பதால் தாமதம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்