#ElectionBreaking: நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி.!

Default Image

மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி. 

மேற்கு வங்கத்தில் வரும் 27 -ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் தொடங்கவுள்ளது. சட்டமன்ற தேர்தல் அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும்.

இதனிடையே, சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டிருந்தார். இதில் பெண்கள் 50 பேர், இஸ்லாமியர்கள் 42 பேர், தாழ்த்தப்பட்ட சமுகத்தில் 79 பேர், பழங்குடியினர் 17 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 80 வயதிற்கு அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என பல அதிரடியான விஷயங்களை வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது மம்தா பாணர்ஜி தெரிவித்திருந்தார். அப்போது, பாஜகவின் ஏற்று மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். தனது கட்சியில் இருந்து பிரிந்து செல்வர்களை தடுத்து நிறுத்தவும், கட்சியை மீட்டெடுப்பதற்காகவும் இந்த தொகுதியில் போட்டியிட பல்வேறு சவால்களை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பாக மம்தா பானர்ஜியை எதிர்த்து, சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜியுடனான மோதல் ஏற்பட்டதால் பாஜகவின் இணைந்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழல் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்