பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது – பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி..!

Default Image

தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறும், இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மற்றும் பாமகவுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்ட்டணியில் உள்ள பாஜகவிற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறும், இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என  தெரிவித்தார்.

மேலும், தேசிய கட்சியான பாஜக வெற்றியோ அல்லது தோல்வியோ அனைத்து இடங்களிலும் போட்டியிட்டுருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்