#INDvsEND: ஹாட்ரிக் வெற்றி.., தொடரை கைப்பற்றிய இந்தியா..!

Default Image

நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.

இதில் இந்திய அணியில் அக்ஸர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 365 ரன்கள் எடுத்து 160 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.

அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் 101 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். இதில் இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சிஸை தொடங்கி விளையாடியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சில் மிரட்டி வந்தனர். அஸ்வின் தொடர்ந்து முதல் 2 விக்கெட்டை பறித்தார். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பார் என எதிர்க்கப்பட்ட நிலையில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி பேட்டிங்கில் திணறி வந்தது.

இறுதியாக இங்கிலாந்து அணி 54.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்