#BREAKING: தொகுதி பங்கீடு இழுபறி.. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்-அழகிரி ..!

Default Image

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கிறோம் என கே.எஸ் அழகிரி கூறினார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.  ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம் செய்தியாளர் 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு கே.எஸ் அழகிரி இது மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? நீங்களாக எப்படி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என சொல்றீங்க..? ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என கூறினார். தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கிறோம். விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்