ஆவின் பாலில் மிதந்த தவளை…! விசாரணை மேற்கொண்ட அதிகாரி…!

சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது .

இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் பாஸ்கரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பாஸ்கரன் விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐயங்கரன் சிவனேசன் என்பவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை கிடந்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.