ஜம்மு காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை.!இன்று கொலை வழக்கு விசாரணை!

Default Image

இன்று , ஜம்மு காஷ்மீரில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்குகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன் என்பதால் அவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கை வாதாட ஜம்மு காஷ்மீர் அரசு இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் மீதான பலாக்காரத்தைக் கண்டித்து, பாலிவுட்டின் நட்சத்திரங்களும் திரண்டு மும்பையில் பேரணி நடத்தினர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி, மும்பை ,திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்