திமுக-விடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வற்புறுத்துவோம் – கே.பாலகிருஷ்ணன்

வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு திகவை வற்புறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக காங்கிராஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது என்றும், அதுபோல வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு திகவை வற்புறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.