காமன்வெல்த் போட்டியில் பதக்கம் குவித்த…!!! இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து…!!!

Default Image

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். அதேநேரத்தில் ஆடவர் பிரிவில் விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்தும், ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடியும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

இவர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பேட்மிண்டனில் இந்தியாவின் மகள்கள், பெருமை சேர்த்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். அதேபோல், கூட்டுமுயற்சிக்கு வெற்றிகிடைத்துள்ளதாக, டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்