தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி..!! கருப்புக் கொடியேற்றி போராட்டம்..!!!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். நேதாஜி நகர், தேவர் நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் ஆங்காங்கே கருப்புக் கொடி ஏற்றி வைத்துள்ளனர்.

இதே போன்று பனிமயமாதா பேராலயத்தின் வளாகத்தில் அமர்ந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.முத்தம்மாள் காலணி, சங்கரபேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்