தஞ்சை கல்யாணபுரம் சீனிவாசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை..!! முன்னிட்டு ஆளுநர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்பு…!!!

Default Image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கருட சேவை நிகழ்வில் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.

விழாவில் கலந்துகொண்டு தமிழில் மாலை வணக்கம் கூறி பேசிய ஆளுநர், தமிழர்களின் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் ஊர் தஞ்சை என பெருமிதம் தெரிவித்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்