#BREAKING: பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி., ஒரு இடம்கூட பிடிக்காமல் பாஜக படுதோல்வி.!

Default Image

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது என கூறப்பட்டது.

இதில் மொத்தம் 9,222 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 2,037  பேரும், பாஜக சார்பில் 1,003 பேரை தேர்தலில் போட்டியிட்டனர். இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முனிசிப்பாலிட்டிகள் அனைத்தையும் காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடந்த இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநில விவசாயிகள் தான் அதிகளவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பங்கெடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, அபோஹர், பதிந்தா, கபுர்தலா, ஹோஷியார்பூர், பதான்கோட், மோகா மற்றும் பட்லாவை ஆகிய 7 மாநகராட்சிகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்