மத்திய பிரதேச பஸ் விபத்து – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சிதி மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிதி மாவட்டம் பட்னா கிராமம் அருகே 54 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கால்வாய் மேம்பாலத்தில் வைத்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். சிலர் மட்டும் நீந்தி கரைக்கு வந்த நிலையில் கிராம மக்கள் அவர்களை மீட்டனர்.

இந்நிலையில், கால்வாயில் விழுந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு  படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்த நிலையில், தற்பொழுது 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களுக்கு 5 லட்சம் நிதி உதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் அறிவித்துள்ளார்.