+2 தேர்வு தொடக்கம்… மே 2-க்குள் தேர்தல்..?

Default Image

பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3-ஆம் தேதி தொடங்கி மே 21 முடிவடைய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு தேதி அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிளஸ் டூ தேர்வு தொடங்கும் மே3-ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை தேர்தல் 93,000 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 11, 12-ம் தேதி தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என கேட்டறிந்தார். இதனால், ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்