விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

Default Image

கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் புதிதாக 3660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கடந்த ஒரு வாரமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதற்கு காரணம் விதிமுறைகள் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதும், மக்கள் போடப்பட்டுள்ள சில தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் இருப்பதும் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமிஷனர்கள மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் கலெக்டரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார். அதில், மக்கள் நலன் கருதி படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், போடப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது எனவும் கூறியுள்ள அவர், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கு சந்திக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் அல்லது மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலைமை வரும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்