ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு – மெக்சிகோ அழகு ராணி நள்ளிரவில் கைது!

Default Image

மெக்சிகோவின் அழகு ராணியான சுனிகாவுக்கு ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நள்ளிரவில் வந்த இரண்டு லாரிகளை சபோபான் ராணுவ எல்லையில் இருந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 2 ஏ.ஆர் ரக துப்பாக்கிகளும், 38 கை துப்பாக்கிகளும், 9 பத்திரிக்கைகளும் இருந்துள்ளது. உடனடியாக அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டின் அழகுராணி சுனிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் ஆயுத கடத்தல்காரர்களுடன் மெக்சிகோவின் அழகுராணி சுனிகாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே அழகுராணி பட்டம் வென்ற சுனிகா தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்