சூர்யா இல்லாமல் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய Surya40 படக்குழு..!

Default Image

சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருவதால் அவரின் 40 வது படத்திற்கானபூஜையில் இன்று கலந்து கொள்ளமுடியவில்லை.

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் பாண்டியராஜ், டி.இமான், பிரியங்கா அருள் மோகன், தேவதர்ஷினி, சரண்யா, சத்யராஜ் என பலர் கலந்துகொண்டார்கள் ஆனால் சூர்யா கலந்துகொள்ளவில்லை.

ஏனென்றால் கடந்த 7 ஆம் தேதி சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 12 ஆம்  தேதி வீடு திரும்பினார். அவர் ஓய்வு எடுக்க சிறிது நாட்கள் ஆகும் என்பதால் சூர்யா படத்தில் இணைய சிறிது நாட்கள் ஆகும். மேலும் இந்த படத்திற்கான பூஜை தொடங்கியுள்ள புகைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு சூர்யா விரைவில் கலந்துகொள்வார் என்று பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்