முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ்.. நாளை டோக்கன்..!

சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக முதியோர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும், புதியதாக பெற விரும்புபவர்கள் www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025