ராஜஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பிகானேர் அருகே நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய நில அதிர்வு மையம் வழங்கியது. இதுவரை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் அல்லது சொத்து சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 08:01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்.சி.எஸ் தெரிவித்துள்ளது.