ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையரிடம் அதிமுக கோரிக்கை

சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர்.தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்களுடன் தேர்தல் ஆணையக் குழு தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை அதிமுக வரவேற்பதாகவும் ,வாக்குச்சாவடிகளில் நிழலுக்கு பந்தல், குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்தில் மின்விளக்கு பொறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025