தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி

Default Image

பெங்களூரில் இருந்து திரும்பிய சசிகலாவுக்கு தமிழகத்தில் நுழையும் போது அதிமுக கொடியுடன் உள்ள காரை வழங்கியது அதிமுக நிர்வாகி சம்பங்கி.

பெங்களூரில் இருந்து காரில் சசிகலா புறப்பட்ட போது அவரதலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி – சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி து காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார். அப்போது காரில் கொடியை அகற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதனால் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் மாநில எல்லைக்குள் வந்து, அந்த காரில் சென்னை புறப்பட்டார்.

இந்த கார் யாருடையது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. சசிகலா வந்த அதிமுக கொடி பொருத்தப்பட்ட கார் சூளகிரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் கார் என்று தெரிய வந்தது. இதுகுறித்து சம்பங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவுக்கு அதிமுக சார்பாக வரவேற்பு அளித்தோம். அப்போது, சசிகலாவின் கார் பழுந்தடைந்தது. அதிமுக தொண்டனின் காரில் தமிழகம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், அந்த காரை வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி, அம்மாவுக்கு ஒருதுணையாக இருக்கலாம் என்று செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்