சசிகலா பயணம் செய்ய உள்ள அனைத்து பகுதிகளிலும், போலிஷ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், இன்று சென்னை திரும்புகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார்.
சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் உற்சாகத்துடன் கூடியுள்ள நிலையில், ஓசூர் ஜூஜூ வாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்த அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில், சசிகலா வேறு ஒரு காருக்கு மாறினார்.
இந்நிலையில், இவரை வரவேற்கும் வண்ணமாக, மேளதாளங்களுடன் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்குன்றனர். சசிகலா பயணம் செய்ய உள்ள அனைத்து பகுதிகளிலும், போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.