BREAKING: சென்னையில் பிரமாண்டமான மாநாடு – கமல்ஹாசன் அறிவிப்பு ..!

Default Image

பிரமாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டள்ள அறிக்கையில், நான்காவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் நமது மகத்தான தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் பிரமாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்ணையும், மொழியையும், மக்களையும் காக்கவே நம் களம் இறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடை இல்லை நாம் ஒருபோதும் துவளும் தடையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் அணிதிரள வேண்டும். மக்கள் உற்றார் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம் சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடைசூழ பிப்ரவரி 21-ம் தேதி சென்னை நோக்கி அலை அலையாய் திரண்டு வாருங்கள்.

பழி போடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்கு துவங்க உரையை சேர்த்து எழுதுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi
Pawan Kalyan
US President - China President
murder