#Budget2021 : காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நகர்ப்புறங்களிலும், நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.