10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்த மகள்…! இதன் பின்னணி என்ன?

Default Image

யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃபிரீசர் பெட்டிக்குள் வைத்திருந்துள்ளார். 

ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் யூமி யோஷினோ என்ற 48 வயதான ஒரு பெண் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அந்த வீட்டுக்கு முறையாக வாடகை செலுத்தாத காரணத்தால், சில வாரங்களுக்கு முன் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  திறந்ததும் உறைந்து போன நிலையில் மனிதனின் சடலமொன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஃப்ரீசரில் இருந்த சடலம் இவரின் தாயார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து யூமி யோஷினோ கூறுகையில், தனது தாயாரின் பெயரில்தான் வீடு இருந்ததாகவும், அவர் உயிரிழந்தது தெரிந்தால் பிளாட்டை காலி செய்ய சொல்லி விடுவார்கள் என்ற பயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ப்ரீசரில் மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், பிரேத பரிசோதனையும் செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த போது அவரின் தாயாருக்கு 60 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்